சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி மற்றும் அழகநேரி கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி, மினி கிளிக்கை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, இணை இயக்குனர் நெடுமாறன், துணை இயக்குனர் கலுசிவலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.