கோப்புபடம் 
செய்திகள்

திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி ஈ.வி.ஆர். சாலையில் உள்ள அரிசி குடோன் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக திருச்சி பெரியார் தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுலைமான் ஷெரீப்பை (வயது 45) கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து அவர் விற்பனைக்காக வைத்திருத்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT