கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே நம்பர் எழுதிக் கொண்டிருந்த குளமங்கலம் தங்கவேல் மகன் தமிழ்செல்வனை தனிப்படை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.