தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அஞ்செட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த நவாஸ் (40) என்பவர் மது விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.