நூலகங்கள் திறப்பு 
செய்திகள்

நீலகிரியில் முழு ஊரடங்கிற்கு பிறகு நூலகங்கள் திறப்பு

நூலகத்தில் உட்கார்ந்து படிக்க அனுமதி இல்லை. போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக புத்தகங்கள் எடுத்து படிப்பவர்களுக்கு அனுமதி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் மற்றும் பிற இடங்களில் உள்ள பகுதி நேர நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நூலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நீலகிரியில் நேற்று முதல் முழு ஊரடங்குக்கு பின்னர் நூலகங்கள் திறக்கப்பட்டு உள்ளது.