மரணம் 
செய்திகள்

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஓசூர்:

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன சூலாமலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 32). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு கம்பெனியில் பெயிண்டு் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயக்குமார் இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.