சென்னையில் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் வைத்து இருக்கும் வியாபாரிகள் கோயம்பேட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இனி இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்க முடியாத நிலை நாளை முதல் ஏற்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட உள்ளதால் காய்கறி மற்றும் பழங்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.