வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் கோடியக்காடு ராமர் பாதம் அருகே வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சோதனை சாவடியில் வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் பணியில் இருந்தனர். அப்போது கோடியக்கரை பகுதியில் இருந்து வந்த சேட் (வயது25) என்பவர் அங்கு பணியில் இருந்த வனத்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனவர் சதீஷ்குமார் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட் என்பவரை கைது செய்தனர்.