மரணம் 
செய்திகள்

கீழ்பென்னாத்தூர் அருகே எலி மருந்து சாப்பிட்டவர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே எலி மருந்து சாப்பிட்டவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். அவரது மகன் ஏழுமலை (வயது 35), மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை மருந்து என நினைத்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.