கைது 
செய்திகள்

கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீசார் பேவநத்தம் சிவன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அரசகுப்பம் அஜித் (வயது 24), கெலமங்கலம் கணேசா காலனி சசிகுமார் (24), மற்றொரு சசிகுமார் (23), அண்ணா நகர் முரளி (20), சின்னட்டி பாஸ்கர் (30) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.