கைது 
செய்திகள்

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் தப்பிச்சென்றவர் கைது

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் தப்பிச்சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கீரனூர்:

கீரனூர் கள்ளர் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 45). சம்பவத்தன்று இவர் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர். அப்போது நந்தகுமார் (46) என்பவர் சிக்கினார். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்றவரை தேடி வந்தனர். மேலும் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் பதுங்கி இருந்த வேலுச்சாமி (40) என்பவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடமிருந்து 4 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.