ஆரணி:
களம்பூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தில் மண் மற்றும் மொரம்பு மண் கடத்தியதாக சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 35), புகழேந்தி (23), மனோகரன் (28), பரத் (23), பழனி (40) ஆகிய 5 பேரை களம்பூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.