கபசுர குடிநீர் 
செய்திகள்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கும், முதியவர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT