கைது 
செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து ஓசூர் ராஜாஜி நகரை சேர்ந்த கடைக்காரர் சீனிவாசரெட்டி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.