காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான வீர்பத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 87. கடந்த ஏப்ரல் 13-ந்தேதி அவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
வீர்பத்ர சிங் 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், 5 முறை எம்.பி.யாகவும், 6 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.