அரூர்:
அரூர் அருகே உள்ள பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 33). இவர் கைலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கோட்டப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.