அரூர்:
அரூர் அருகே உள்ள எச்.தொட்டம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 45). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள முனியப்பன் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலுக்கு அருகே இருந்த கிணற்றில் பழனி தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.