அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை சூரப்பா தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார்.