கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38) தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீ்ட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.