புதுடெல்லி:
ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாநாடு நடந்து வருகிறது. அதன் இரண்டாம் நாள் கூட்டமான நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், கோவின் தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். ஏனென்றால், இந்தியாவுக்கு வர்த்தக பலன்களை விட மனிதாபிமானம்தான் முக்கியம் என்றார்.