ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 
செய்திகள்

ஈரோட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், ஈரோடு சூரம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சசி முன்னிலை வகித்தார்.

மாலை மலர்

ஈரோடு:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், ஈரோடு சூரம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சசி முன்னிலை வகித்தார்.

மின்வாரியத்தில் கேங் மேன் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு எழுதி, தயார் நிலையில் உள்ள, 10 ஆயிரம் பேருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். கொரோனா பரவல் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 900 கள உதவியாளர்கள், 575 உதவி பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 1,300 கணக்கீட்டாளர்கள் காலி பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவை தொடங்க வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. அரசு பணிகளில் பணி நியமன தடை சட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.