திருட்டு 
செய்திகள்

தர்மபுரி அருகே மினி லாரி திருட்டு

தர்மபுரி அருகே மினி லாரி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் எர்ரனள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவர் சொந்தமாக மினி லாரியை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். லாரியில் திடீர் பழுது ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களுக்கு முன் குண்டல்பட்டியில் உள்ள ஒரு பட்டறையில் லாரியை நிறுத்தி இருந்தார். அந்த லாரியை திடீரென காணவில்லை. மர்மநபர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT