திருட்டு 
செய்திகள்

தர்மபுரி அருகே மினி லாரி திருட்டு

தர்மபுரி அருகே மினி லாரி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் எர்ரனள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவர் சொந்தமாக மினி லாரியை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். லாரியில் திடீர் பழுது ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களுக்கு முன் குண்டல்பட்டியில் உள்ள ஒரு பட்டறையில் லாரியை நிறுத்தி இருந்தார். அந்த லாரியை திடீரென காணவில்லை. மர்மநபர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை திருடியவர்களை தேடி வருகின்றனர்.