கோப்புபடம் 
செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 28 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்றபனையில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். 

இதேபோல் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 300 மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.