கொரோனா வைரஸ் 
செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. அங்கு சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்படும் நபர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

நேற்றைய பரிசோதனையில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 109 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 19,569 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 200 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 340 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.