ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சாத்தனப்பட்டு கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் மகாலட்சுமி(வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படிப்பு இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து நாகராஜ் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மகாலட்சுமியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.