டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் பல பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால் வாகன போக்குவரத்து கடும் பாதிப்படைந்துள்ளது. நிலச்சரிவால் நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்டின் கார்வல் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி வான்வழியே சென்று இன்று பார்வையிட்டார்.