மரடோனாவிற்கு அருங்காட்சியகம் அமைத்த கேரள ஓட்டல் 
செய்திகள்

மரடோனாவிற்கு அருங்காட்சியகம் அமைத்த கேரள ஓட்டல்

கேரளாவில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா தங்கி இருந்த விடுதி அறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளது.

மாலை மலர்

கேரளா:

அர்ஜென்டினா கால்பந்து ஜம்பவான் மரடோனா கடந்த 2012-ம் ஆண்டு கேரளா வந்த போது கண்ணூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் மாரடைப்பால் மறைந்த அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் தங்கி இருந்த அறையை அருங்காட்சியமாக உணவு விடுதி நிர்வாகம் மாற்றி உள்ளது.

அருங்காட்சியகத்தில் 2012-ம் ஆண்டு வந்தபோது மரடோனா பயன்படுத்திய பொருட்கள் நினைவு சின்னமாக வைக்கப்பட்டு உள்ளன.