மோரிகான்:
அசாமின் கோஜாய் மாவட்டத்தின் லங்கா நகரில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட பலருக்கும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட்டன. 200-க்கும் மேற்பட்டோருக்கு இந்த உடல் நல பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதில் பலரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.