கைது 
செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

அரியாங்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் காந்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், சாம்பசிவம், முரளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT