விபத்து பலி 
செய்திகள்

மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

அரியாங்குப்பம் ஓடைவெளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 68). இவர், தனது மகன் அன்பழகனுடன் மொபட்டில் சென்றார். புதுச்சேரி- கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் அருகே சென்றபோது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கேசவன் நடுரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுவை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.