மரணம் 
செய்திகள்

அறந்தாங்கியில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை

அறந்தாங்கியில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

 அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் 50 வயது மதிக்க தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.