மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

சென்னை அண்ணாநகர், ‘ஓ’ பிளாக், 37-வது தெருவை சேர்ந்தவர் சண்முகமணி. இவருடைய மனைவி நளினிராணி (வயது 56). இவர், நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது துணியை மின்சார ‘அயர்ன் பாக்ஸ்’ மூலம் இஸ்திரி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் நளினிராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.