செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மறைமலை நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் திருமாறன் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருமாறனுக்கு பாதுகாப்பாக வந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் உயிரிழந்தார்.
அதிமுக பிரமுகர் திருமாறனை வெட்டிக்கொலை செய்து தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.