பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர் 
செய்திகள்

இந்த ஆண்டில் எல்லையில் 4 ஆயிரம் முறை அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 52 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

நவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு 3,233 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.