சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்துள்ள தமிழக அரசு ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.