கோப்பு படம். 
செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக எல்லையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பயங்ரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவ முயற்சிப்பதும், அதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடிப்பதும் அடிக்கடி நிகழும் சம்பவமாகும்.

இந்த நிலையில் பஞ்சாப் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.

ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பயங்ரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அட்டாரி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் மேலும் பதுங்கியிருக்கிறார்களா என்று பி.எஸ்.எப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அங்கு அடர்த்தியான மூடுபனி இருப்பதால் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.