கோப்பு படம் 
செய்திகள்

மத்திய பிரதேசம்: விஷ சாராயம் குடித்த 10 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டம் பஹவாலி மற்றும் மன்பூர் கிராமங்களை சேர்ந்த 18-க்கும் அதிகமானோர் நேற்று இரவு விஷ சாராயம் குடித்துள்ளனர்.

விஷசாராயம் குடித்த அனைவருக்கும் இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

விஷசாராயம் குடித்தவர்களில் 10 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.