இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் பிளாஸ்மா சிகிச்சை முக்கிய இடம்பெற்றிருந்தது. குறிப்பாக தொடக்க கட்ட தொற்றில் இருந்த நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்காக கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மா தானம் பெற்று கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது.
ஆனால் இந்த சிகிச்சை அறிவியல் சாராத பயன்பாடு மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.