இருள் நீக்கி ஒளி தரும் தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. மக்களை வதம் செய்த கொடிய அசுரனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழித்து வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பியதும் அவருக்கு பட்டாபிஷேகம் செய்த தினமாக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.