சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
பொதுமுடக்கத்தின் 4 ஆம் கட்ட தளர்வில் பெட்ரோல் பங்க்குகள் இயங்குவதற்கான நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க்குகள் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.