முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆர் உருவச்சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றன. இதுதவிர அதிமுக கிளைக் கழகங்கள் சார்பில் அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆர் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றன.
அதன்பின்னர் தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, எம்ஜிஆர் சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர், அங்கு நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். #MGR #MGRCommemorativeCoin