பண்ருட்டி:
பண்ருட்டி பஸ் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பண்ருட்டி அவுலியா நகரைசேர்ந்த உசேன் (வயது 52). என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.