செய்திகள்

பாலகிருஷ்ண ரெட்டியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. #BalakrishnaReddy #SupremeCourt

மாலை மலர்

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக  தண்டனையை நிறுத்தி வைத்து உடனடியாக ஜாமீன் வழங்கியது.

இந்த தீர்ப்பினால், பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது.