செய்திகள்

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார். #CIC #SudhirBhargava

மாலை மலர்

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொதுமக்கள் விபரங்களை பெற மனு செய்யும் மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்பட 11 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த விவகாரத்தை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் தொடர்ந்த வழக்கில் உடனடியாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கையாளப்பட வேண்டும் என சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.
 

இதைதொடர்ந்து, புதிதாக மேலும் 4  தகவல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்தது. யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.