சுப்ரமணியன் சுவாமி 
செய்திகள்

பா.ஜனதா ஐ.டி பிரிவு கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது: சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் தொழில்நுட்பப் பிரிவில் சிலர் போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி தனிப்பட்ட முறையில் தன்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பா.ஜனதாவில் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றவர் சுப்ரமணியன் சுவாமி. இருந்தாலும் பா.ஜனதாவுக்கு எதிராக தனது கருத்தை தெரிவிப்பதில் அவர் தயங்குவதில்லை. இதனால் பா.ஜனதா கட்சியில் உள்ளவர்களே சுப்ரமணியன் சுவாமியை விமர்சிப்பது உண்டு.

இந்நிலையில் ‘‘பா.ஜனதாவின் தொழில்நுட்பப் பிரிவு கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது. பா.ஜனதாவில் சிலர் போலி டுவிட்டர் மூலம் தனிப்பட்ட முறையில் தன்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்கள் நடத்தும் தாக்குதலுக்கு என்னை பின்தொடர்பவர்கள் பதில் தாக்குதல் நடத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல’’ என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.