தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ் தடியடியில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் கருத்து குறித்து ஆவேசமாக பதிலளித்தனர்.
தேவர் காலனியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
தடியடியில் காயம் அடைந்த பிளஸ்-2 முடித்த மாணவி பினோலின் பிரியங்கா கூறுகையில், “நாங்கள் அமைதியான முறையில் போராடினோம். போராட்டத்துக்கு சிறு குழந்தைகளையும் அழைத்துச் சென்றோம். வன்முறையில் ஈடுபடுவதாக இருந்தால் நாங்கள் குழந்தைகளை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்.
எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது தேவை இல்லாத வார்த்தை. இந்த மனநிலையில் அவர் எங்களை சந்தித்து இருக்க கூடாது. போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்கிறார் ரஜினிகாந்த். போராட்டம் நடத்தினால்தான் தமிழகம் நல்ல மாநிலம் ஆகும். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.