ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. கலவரத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் ரோட்டோரம் நிறுத்தி இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ‘ஏ.டி.எம்.’ சூறையாடப்பட்டது.
இந்த நிலையில் போராட்டத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் வெளியே சேதம் அடைந்த பொருட்கள் மற்றும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இக்குழுவில் வருவாய் மற்றும் போலீஸ் துறைகளை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பு நடத்தி சேத விவரங்களை இன்று அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த தகவலை அதிகாரி சுகுமார் தெரிவித்தார்.