நிதின் கட்காரி 
செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி

போக்குவரத்து விதிமீறலில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் கடுமையான முறையில் நாடு முழுவதும் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மோட்டார் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காரணமானவருக்கு ரூ.5 லட்சம் வரையும், படுகாயம் ஏற்படுத்தினால் ரூ.2½ லட்சம் வரையும் அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

SCROLL FOR NEXT