ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 83) ஒய்வு பெற்ற ஆசிரியர். எல்.ஐ.சி. முகவராகவும் இருந்தார். இவர் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். பக்கிரிசாமியின் உடலுக்கு ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக சங்கத்தினர், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், கட்டிட தொழிலாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் ஸ்ரீமுஷ்ணம் மயானத்தில் பக்கிரிசாமியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த பக்கிரிசாமிக்கு வசந்தா என்ற மனைவியும் 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.