செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமில் பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது

இலங்கை அகதிகள் முகாமில் பெண்ணிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் செபஸ்டின். இவரது மனைவி ஜெபமணி. இன்று அதிகாலை அவர் வீட்டின் வெளியே தூங்கினார். அப்போது மர்ம வாலிபர் ஜெபமணியிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

அக்கம் பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் காவங்கரை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.